பல்லவி
ஸி1வ ஸி1வ 1ஸி1வயன ராதா3 ஓரி
2அனுபல்லவி
ப4வ ப4ய பா3த4லனணசுகோ ராதா3 (ஸி1)
சரணம்
சரணம் 1
3காமாது3ல தெக3 கோஸி பர
பா4மல பருல த4னமுல ரோஸி
பாமரத்வமுனெட3பா3ஸி அதி
4நேமமுதோ பி3ல்வார்சன ஜேஸி (ஸி1)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸி1வ/ ஸி1வ/ ஸி1வ/-அன ராதா3/ ஓரி/
'சிவ/ சிவ/ சிவ'/ எனலாகாதா,/ அன்பர்காள்/
அனுபல்லவி
ப4வ/ ப4ய/ பா3த4லனு/-அணசுகோ ராதா3/ (ஸி1)
(அதனால்) பிறவி/ அச்சமெனும்/ தொல்லைகளை/ அடக்கலாகாதா/
சரணம்
சரணம் 1
காம/-ஆது3ல/ தெக3/ கோஸி/ பர/
இச்சை/ ஆகியவற்றினை/ அற/ வீழ்த்தி/ பிற/
பா4மல/ பருல/ த4னமுல/ ரோஸி/
மாதர்/ பிறர்/ செல்வத்தினை/ வெறுத்தொதுக்கி/
பாமரத்வமுனு/-எட3பா3ஸி/ அதி/
அறிவீனத்தினை/ யொழித்து/ மிக்கு/
நேமமுதோ/ பி3ல்வ/-அர்சன/ ஜேஸி/ (ஸி1)
நியமத்துடன்/ வில்வ/ அருச்சனை/ செய்து/ சிவ சிவ...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
1 - ஸி1வயன ராதா3 ஓரி - ஸி1வயன ராதா3.
2 - அனுபல்லவி - சில புத்தகங்களில், அனுபல்லவி, பல்லவியின் இரண்டாவது வரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
8 - வர த்யாக3ராஜ - ஓரி த்யாக3ராஜ.
Top
மேற்கோள்கள்
3 - காமாது3ல - இச்சைகள் ஆகியவை - இச்சை முதலான உட்பகை ஆறு.
4 - நேமமுதோ - நியமத்துடன் - 'பதஞ்சலி யோக சூத்திர'த்தினில் (II.32) கூறப்படும் நியமங்களாவன - தூய்மை, மகிழ்ச்சி, தவம், ஓதல், இறைப்பற்று.
6 - லஜ்ஜாது3ல - நாணம் முதலானவை - இறைவனின் நாமம் உரைப்பதற்கு நாணம் கூடாதென. பாகவதர்களின் பஜனையில், தியான ச்லோகத்தில், இறைவனின் வாக்கு -
"நாணத்தினை விட்டு, எவன் எனது நாமங்களை எவ்வமயமும் உரைக்கின்றானோ,
அவன், தொண்டர்களின் இணக்கத்தினைப் பெற்று, என்னுடைய பதத்தினை அடைகின்றான்."
Top
7 - ஹ்ரு2ஜ்-ஜலஜமுனனு - இதயக் கமலத்தினில் - ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்த லஹரி'யில் (9) கூறப்பட்டது -
"ஆழந்த ஏரிகளிலும், மனிதர்களற்ற கொடிய காடுகளிலும்,
பரந்த மலைகளிலும் திரிவர், மலர்களுக்காக, முட்டாள்கள்;
ஏ உமை மணாளா! உனக்குத் தனதோர் இதயக் கமலத்தினை அர்ப்பித்து,
களிப்புடனிருக்க மக்கள் அறிந்திலர், ஏனோ? அந்தோ!"
(ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
விளக்கம்
5 - முஜ்-ஜக3தீ3ஸ்1வருலனி - மூவுலகங்களின் ஈசன் - சில புத்தகங்களில், இதனை, இதற்கு முன் வரும், 'நன்மக்களை'க் குறிப்பதாகக் கொள்ளப்பட்டுள்ளது. 'ஈஸ்1வருலு' என்று பன்மையில் இருப்பதனால், அப்படிக் கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், தமிழைப் போலவே, தெலுங்கிலும், மரியாதைப் பன்மையுண்டு. இவ்விடத்தில், இஃது, மரியாதைப் பன்மையாகும். மேலும், இதனை அடுத்துவரும், 'தனது இதயக்கமலத்தினில் தொழுது' என்பதனால், இது 'சிவனை'யே குறிக்கும்.
ஆகமங்களைப் போற்றி - ஆகமங்களின் நெறியில் இறைவனைப் போற்றி.
Top